செய்தியாளர் மீது தாக்குதல்: யாழில் ஆர்ப்பாட்டம்

பிராந்திய செய்தியாளர் மீது தாக்குதல்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 30-05-2018 | 8:55 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்திலிருந்து வௌிவரும் பத்திரிகையொன்றின் பிராந்திய செய்தியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். துண்டுக்குடிப் பகுதியில் நேற்று முன்தினம் குறித்த பிராந்திய செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து யாழில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.