கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு

by Bella Dalima 30-05-2018 | 5:14 PM
Colombo (News 1st)  நாளை (31) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. நிஷாந்த ரணதுங்க தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த மனுவை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டுயிடும் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.