1,50,000 பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து தீர்மானம்

1,50,000 பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து தீர்மானம்

by Bella Dalima 29-05-2018 | 5:15 PM
மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியாத் தொற்றுநோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து தீர்மானித்துள்ளது. உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருந்த போதிலும் நியூசிலாந்தின் முக்கிய பொருளாதாரத் தொழிலான பால் வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை இது பாதிக்கும். இதனால் பாக்டீரியாத் தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பசுக்களையும் ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் அழிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் இதனை செய்யாவிட்டால் நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களைக் காக்க முடியாமற்போய்விடும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறியுள்ளார்.