பொதுமக்கள் வழங்கிய அனைத்து பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டன
by Bella Dalima 29-05-2018 | 7:19 PM
Colombo (News 1st)
சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு பொதுமக்கள் வழங்கிய அனைத்து பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கும் பொறுப்பு இன்று நிறைவேற்றப்பட்டது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் சக்தி - சிரச நிவாரண யாத்திரை பியகம தெற்கு - யடவத்த பகுதிக்கு இன்று சென்றது.
பின்னர் கம்பஹா விஜேராம விஹாரைக்கு அருகில் பொருட்கள் கையளிக்கப்பட்டன.