தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

by Staff Writer 27-05-2018 | 9:47 PM
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை குறைவடைந்துள்ள போதிலும் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதே ​வேளை சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது . 20 மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட 19 519 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 339 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது