பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலகத்திற்கு சீல்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டது

by Bella Dalima 26-05-2018 | 7:53 PM
Colombo (News 1st)  கொழும்பு - 02, Parkland கட்டிடத்தில் அமைந்துள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலகம் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் முன்னிலையில் அந்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆவணங்கள் இருக்கும் இடம் தமக்குத் தெரியாது என ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் இதன்போது தெரிவித்துள்ளார். அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலுள்ள காப்பகத்தில் வைத்து ஆவணங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும், அதன் சாவிகள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, விசாரணை அதிகாரிகளால் நிறுவன வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, விசாரணை அதிகாரிகளால் இந்த அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இன்றைய தினம் சோதனை நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸூக்கு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்