பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச்சென்ற நிவாரண யாத்திரை

பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச்சென்ற 'சக்தி சிரச நிவாரண யாத்திரை'

by Bella Dalima 26-05-2018 | 8:28 PM
Colombo (News 1st)  சக்தி சிரச நிவாரண யாத்திரை வாகனங்கள் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி இன்றும் புறப்பட்டுச் சென்றன. புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகள் நேற்று காலை ஆரம்பித்து நள்ளிரவில் நிறைவு பெற்றது. மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச அதிகாரிகளின் உதவியுடன் வழங்கிவைக்கப்பட்டது. இதேவேளை, சக்தி - சிரச நிவாரண யாத்திரை கொழும்பு -02, பிரேப்ரூக் பிளேஸிலுள்ள MTV/MBC தலைமையகத்திலிருந்து இன்று காலை குருணாகல் மாவட்டம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை MTV/MBC தலைமையகத்தில் இன்றும் மக்கள் கையளித்தனர்.