தூத்துக்குடி படுகொலைக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு

தூத்துக்குடி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 26-05-2018 | 4:42 PM
Colombo (News 1st)   தமிழகத்தின் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். பொதுமக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு கோரி கடந்த 22 ஆம் திகதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த போது அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.