சேதனப்பசளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உர மானியம்

சேதனப்பசளையைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உர மானியம்

by Bella Dalima 25-05-2018 | 4:16 PM
Colombo (News 1st)  சேதனப்பசளையைப் பயன்படுத்தும் விவசாயிகளை வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கான உர மானியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெரும்போகத்தில் நெற்பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இந்த உர மானியம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. கிராம சேவையாளர் பிரிவுகளில் அடையாளங்காணப்படும் விவசாயிகளுக்கு தேவையான நிதி உதவியும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.