பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவி விலகல் 

பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து திலங்க சுமதிபால விலகல்

by Bella Dalima 24-05-2018 | 4:18 PM
Colombo (News 1st)  பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்த திலங்க சுமதிபால உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் எதிர்க்கட்சியில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.