அபாய நிலையில் கடுவளை பாலம்

பலத்த மழை காரணமாக கடுவளை பாலம் அபாய நிலையில்

by Staff Writer 23-05-2018 | 1:08 PM
COLOMBO (News 1st) பியகம, கடுவளை ஆகிய நகரங்களை இணைக்கும் களனி ஆற்றை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள கடுவளை பாலம் பலத்த மழை காரணமாக அபாய நிலையில் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த பாலத்தை அதிகாரசபையின் பொறியியலாளர்கள் குழுவொன்று இன்று காலை ஆராய்ந்ததாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். ஆற்றின் இருமருங்கும் அரிப்புக்குள்ளாகுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது. மண்ணரிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.