நாட்டின் பல பகுதிகளுக்கான மின்விநியோகம் துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

by Staff Writer 23-05-2018 | 1:34 PM
COLOMBO (News 1st) நாட்டின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில மின் உப மின்நிலையங்கள் செயலிழந்துள்ளமையே இதற்கு காரணம் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். சிலாபம் உப மின் நிலையத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் கோளாறு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கட்டுநாயக்க , போலவத்த, பன்னல, புத்தளம், மாகோ, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.  

ஏனைய செய்திகள்