by Staff Writer 22-05-2018 | 9:30 AM
COLOMBO (News 1st)
தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுயன்சா நோய் தொடர்பில் மேலும் ஆராய்வதற்கு தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
கம்புறுபிட்டிய, மாத்தறை பெரிய வைத்தியசாலை மற்றும் கராபிட்டிய ஆதார வைத்தியசாலைகளுக்கு குழுவினர் செல்லவுள்ளனர்.
அவர்கள் அங்குள்ள நோயாளர்களை பரிசோதித்து நோய் தொடர்பில் ஆய்வு செய்து நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போது வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுயன்சா காரணமாக 350 இற்கும் மேற்பட்டவர்கள் தென் மாகாண சைவத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அவர் தெரிவித்தார்.