பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடை

சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடை

by Staff Writer 22-05-2018 | 1:11 PM
COLOMBO (News 1st) நிலவும் சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. வௌ்ளநிலைமையால், பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரியில் 36 மின்பிறப்பாக்கிகளும், எஹலியகொட பகுதியில் 16 மின்பிறப்பாக்கிகளும், ருவன்வெல்ல பகுதியில் 7 மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதிகளில் சுமார் 50,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.