நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் சேகரிப்பு

சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 22-05-2018 | 7:42 AM
COLOMBO (News 1st) சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், சக்தி, சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, பருப்பு, சீனி, நூடல்ஸ், ரின் மீன், பிஸ்கட், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார/ மருத்துவ பொருட்களை கையளிக்க முடியும். கொழும்பு-2, கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரத்மலானை - ஸ்டெய்ன் கலையக வளாகம் மற்றும் தெபானம கலையக வளாகத்தில் இன்று காலை முதல் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலதிக தகவல்களுக்காக 011 – 4 896 896 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் https://www.youtube.com/watch?v=B8Lj_c23A6o