சப்ரகமுவ பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை

சப்ரகமுவ பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை

by Staff Writer 21-05-2018 | 3:29 PM
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார். அதிக மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவினால் அதிபர்களுக்கு பாடசாலகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரத்தை பெற்றுகொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.