பொலன்னறுவையில் மின்னல் தாக்கி இருவர் பலி

பொலன்னறுவையில் மின்னல் தாக்கி இருவர் பலி

by Bella Dalima 20-05-2018 | 4:05 PM
Colombo (News 1st)  பொலன்னறுவை - வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரும் நேற்று (19) மாலை இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 17 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது. இதேவேளை, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.