சாரதிகளுக்கான அறிவுறுத்தல்

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்

by Bella Dalima 20-05-2018 | 3:57 PM
Colombo (News 1st)  பலத்த மழை காரணமாக அதிவேக வீதியில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது. மழை பெய்யும் போது வாகனத்தின் பிரதான விளக்குகளை ஔிரவிட்டு பயணிக்குமாறு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார். மேலும், வாகனங்களுக்கிடையில் இடைவௌியைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சாரதிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்