by Bella Dalima 20-05-2018 | 4:52 PM
Colombo (News 1st)
நாடு முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
சுமார் 8000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகள் உள்ளிட்ட பாடசாலை கட்டமைப்பிற்குள் நிலவும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன தெரிவித்தார்.
ஆரம்ப பாடசாலைகளுக்கான ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளதாக திஸ்ஸ ஹேவாவித்தாரன குறிப்பிட்டார்.