துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் கான்ஸ்டபிள் பலி

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

by Bella Dalima 19-05-2018 | 3:50 PM
Colombo (News 1st)  திருகோணமலை - ஹொரவப்பொத்தானை, வாகொல்லாகட பகுதியில் துப்பாக்கியொன்று தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரவித்தது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (18) நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாகொல்லாகட பொலிஸ் சோதனை சாவடியில் கடமையாற்றும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.