தெங்கு இறப்பர் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் தெங்கு, இறப்பர், தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

by Bella Dalima 19-05-2018 | 4:49 PM
Colombo (News 1st)  கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் தெங்கு, இறப்பர் மற்றும் தேயிலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.4 வீதத்தாலும் தெங்கு ஏற்றுமதி 0.3 வீதத்தாலும், இறப்பர் ஏற்றுமதி வருமானம் 12.6 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது. கடந்த காலத்தில் சீரற்ற வானிலை நிலவிய போதிலும் இந்த ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளமை சிறப்பம்சம் என அமைச்சு சுட்டிக்காட்டியது.