சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வாழ்த்து

எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை பயன்படுத்தியமைக்காக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வாழ்த்து

by Bella Dalima 18-05-2018 | 3:42 PM
Colombo (News 1st) எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை மேற்கொண்டு விலை மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தியமைக்காக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு வழங்கப்படும் கடன் உதவியின் அடுத்த தவணையை வழங்குவதற்கான நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடும் நடவடிக்கையை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விலை சூத்திர அறிமுகம் செல்வந்தர்களை விட வறிய மக்களுக்கு அனுகூலமாக அமையும் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.