உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 595 பேருக்கு பதவி உயர்வு

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 595 பேருக்கு பதவி உயர்வு

by Bella Dalima 18-05-2018 | 4:46 PM
Colombo (News 1st)  நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 595 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 595 பேர் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் பெண் பொலிஸார் என்பது குறிப்பிடத்தக்கது.