இன்று புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பு 

இலங்கைவாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர்

by Bella Dalima 18-05-2018 | 4:25 PM
Colombo (News 1st)  இலங்கைவாழ் முஸ்லிம்கள் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை இன்று நோற்கின்றனர். ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது. நாட்டின் எந்தப் பகுதியிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்படாமையினால், இன்று முதலாவது நோன்பை நோற்க தீர்மானிக்கப்பட்டது.