ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதிக்கிரியைகள்

ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதிக்கிரியைகள் தமிழகத்தில் இடம்பெற்றன

by Bella Dalima 18-05-2018 | 10:08 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதிக்கிரியைகள் தமிழகத்தில் இன்று இடம்பெற்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரான இராஜேஸ்வரி இராமநாதன் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை எய்தினார். அன்னார் நேற்று முன்தினம் (16) தமது 80 ஆவது வயதில் காலமானார். இந்தியா - இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, பட்டமங்கலம் கிராமத்தில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அன்னாரின் பூதவுடலுக்கு பெருந்திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரங்கல் செய்தியை அமைச்சர் பைசர் முஸ்தபா வாசித்தார். தமிழ் நாடு சிவகங்கை மாவட்டத்தின் திருகோஸ்டியூர் தாலுகா - எம். புதூரில் பூதவுடல் இன்று தகனம் செய்யப்பட்டது.