குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சட்டப்படி வேலை

குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை

by Bella Dalima 17-05-2018 | 4:07 PM
Colombo (News 1st)  சேவை யாப்பிற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகியுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் சில பணியாளர்கள் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அருண கனுகல தெரிவித்தார். அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னரே விமான நிலையத்திற்கு வருகை தருமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை, பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.