மாலைத்தீவு பிரஜைகள் இருவர் கைது

ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜைகள் இருவர் கைது

by Bella Dalima 17-05-2018 | 3:56 PM
Colombo (News 1st)  ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு (16) தமது அதிகாரிகள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அருகில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர். இதன்போது, போதைப்பொருள் பொதியை எடுத்துச்செல்வதற்கு சென்ற மாலைத்தீவு பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் அடங்கிய பொதி நெதர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.