by Bella Dalima 16-05-2018 | 6:11 PM
நாளை (17) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் போது அவசர சிகிச்சைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.