by Staff Writer 16-05-2018 | 11:34 AM
COLOMBO (News 1st) பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று ஆஜராகிய பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலம் வரை விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - திகன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக திலும் அமுனுகம பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் ஆஜராகினார்.
விசாரணைகளை தொடர்ந்து அவர் நேற்றிரவு 11.30 அளவில் பயங்கரவாத தடைப் பிரிவில் இருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.