by Staff Writer 16-05-2018 | 1:06 PM
COLOMBO (News 1st)
வடக்கு அதிவேக வீதி நிதி மோசடி வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருந்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகத் தவறியதால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருந்த பொல்கம்பொல இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.