20% கட்டண அதிகரிப்பு கோரும் தனியார் பஸ் ஊழியர்கள்

20 வீத பஸ் கட்டண அதிகரிப்பு வழங்கப்படாவிடின் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

by Bella Dalima 15-05-2018 | 9:46 PM
Colombo (News 1st)  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதி தொடர்பில் தனியார் பஸ் ஊழியர்கள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர். 20 வீத பஸ் கட்டண அதிகரிப்பு வழங்கப்படாவிடின் நாளை (16) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய சில விடயங்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டு, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்