முள்ளிவாய்க்கால் நினைவுதின தீப ஊர்தி பேரணி ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்தி பேரணி ஆரம்பம்

by Bella Dalima 15-05-2018 | 8:05 PM
Colombo (News 1st)  முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்தி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமானது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஆரம்பமான நினைவு தின தீப ஊர்தி பேரணி தென்மராட்சியை இன்று சென்றடைந்தது. இன்று முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து பயணிக்கவுள்ள இந்த தீப ஊர்தி பேரணி வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினூடாகவும் பயணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ள பகுதியை சென்றடையவுள்ளது.