கொழும்பின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை

by Staff Writer 15-05-2018 | 12:11 PM
COLOMBO (News 1st) பியகம - பன்னிப்பிட்டிய மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், கொழும்பின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறினால், ஶ்ரீ ஜயவர்தனபுர, இரத்மலானை, தெஹிவளை, பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். 220 மெகாவோட் மின்விநியோக கட்டமைப்பில் இன்று காலை 7.20 அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.