எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

by Bella Dalima 15-05-2018 | 3:20 PM
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளை அவர் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.