வட மாகாண அரச வைத்தியர்கள் டையாள பணிப்பகிஷ்கரிப்பு

வட மாகாண அரச வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 14-05-2018 | 1:11 PM
COLOMBO (News 1st) வட மாகாண அரச வைத்தியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய வைத்தியர்கள் இன்று 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் கடந்த 4 மாதங்களாக தமக்கு வழங்கப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் வடமாகாண சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.