நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக பலர் இடம்பெயர்வு

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக பலர் இடம்பெயர்வு

by Staff Writer 14-05-2018 | 1:04 PM
COLOMBO (News 1st) பெய்துவரும் மழை காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் இடம்பெயர்ந்து தோட்டத்தில் அமைந்துள்ள நூலகமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை அம்பன்பொல ரோலவ பகுதியில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 24 வயதான ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கத்திற்குள்ளான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.