நினைவேந்தலில் வட கிழக்கு மக்கள் ஒன்று சேர வேண்டும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வட கிழக்கு மக்கள் ஒன்று சேர வேண்டும் - சிவஞானம்

by Staff Writer 13-05-2018 | 7:37 PM
COLOMBO (News 1st) எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் இடத்தினை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பார்வையிட்டனர். இதேவேளை யாழ் பல்கலைக்கழ மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள இடத்தினை இன்று பிற்பகல் பார்வையிட்டனர். மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் பகுதிக்கு இன்று வருகைதந்திருந்தனர்.