by Staff Writer 13-05-2018 | 4:55 PM
இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சுரபாயாவில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
3 வழிபாட்டுத்தலங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஐ.எஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2005 இன் பின்னர் இந்தோனேசியாவில் நடத்தப்பட்டுள்ள பாரிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது.
2005 இல் பாலி தீவுகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.