இந்தோனேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்

இந்தோனேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்: 11 பேர் பலி

by Staff Writer 13-05-2018 | 4:55 PM
இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சுரபாயாவில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3 வழிபாட்டுத்தலங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2005 இன் பின்னர் இந்தோ​னேசியாவில் நடத்தப்பட்டுள்ள பாரிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது. 2005 இல் பாலி தீவுகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.