முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்: செம்மணியில் அஞ்சலி

by Bella Dalima 12-05-2018 | 8:38 PM
Colombo (News 1st)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இன்று செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வின் இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ். மிருசுவிலில் நடைபெற்றது. புனித நிக்கலஸ் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றப்பட்டது.