வலம்புரி சங்குடன் இளைஞர்கள் இருவர் கைது

ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குடன் இளைஞர்கள் இருவர் கைது

by Bella Dalima 12-05-2018 | 3:55 PM
Colombo (News 1st)  வவுனியா - நொச்சுமோட்டை பகுதியில் அரிய வகை வலம்புரி சங்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனைக்காக குறித்த சங்கினை கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்