வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெற்றிலை செய்கை திட்டம்

இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெற்றிலை செய்கை திட்டம்

by Bella Dalima 12-05-2018 | 4:20 PM
Colombo (News 1st)  மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெற்றிலை செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய ஏற்றுமதி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது. வீட்டுத்தோட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.