இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம்

by Bella Dalima 12-05-2018 | 5:02 PM
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை சீறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, எரிமலையை சுற்றிலும் 5 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எரிமலை சீற்றத்தால் ஏற்படும் சாம்பல் மற்றும் புகை மூட்டம் 5,000 மீட்டர் உயரத்திற்கு பரவியுள்ளது. புகை மூட்டம் காரணமாக எரிமலைக்கு அருகிலுள்ள Yogyakarta விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.