by Bella Dalima 12-05-2018 | 3:30 PM
Colombo (News 1st)
எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'வயம்ப ரண அபிமன்' இராணுவ நினைவுத் தூபியை நேற்று (11) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
குருணாகலை - பதுளை வீதி அபிவிருத்தி நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட குருணாகலை இராணுவ நினைவுத்தூபிக்கு பதிலாக, புதிய நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிய நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகளுக்கு 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.