2 கோடியே 12 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

ஹொரணையில் 2 கோடியே 12 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

by Bella Dalima 11-05-2018 | 3:38 PM
Colombo (News 1st)  ஹொரணை பகுதியில் 2 கோடியே 12 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஹொரணையில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 1 கிலோ 767 கிராமிற்கும் அதிகத் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்தது. கடந்த 4 ஆம் திகதி 100 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், தடுப்பு உத்தரவு பெற்றுக்கொண்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 2 கோடியே 12 லட்சம் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் சந்தேகநபரின் வீட்டில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும், சந்தேகநபரிடமிருந்து இரண்டு போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.