வெலிகம பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது

வெலிகம பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது

by Bella Dalima 11-05-2018 | 4:33 PM
Colombo (News 1st)  ஜப்பான் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெலிகம, பொல்அத்துமோதர பாலத்தினை அத்துமீறி திறந்துவைக்கச் சென்று அமைதியின்மையை ஏற்படுத்திய வெலிகம பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாலம் இன்று காலை 11 மணியளவில் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் தலைமையில் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் குறித்த இடத்திற்கு வருகை தந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், பாலத்தின் பெயர்ப்பலகைக்கு சேதம் ஏற்படுத்தி, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதற்கிணங்க குறித்த இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்ய முயற்சித்த போது, வெலிகம பிரதேச சபையின் தலைவரும் உப தலைவரும் தப்பிச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும், அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிகம பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்