மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி: ஆளுநர் பதில்

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கி: இந்திரஜித் குமாரசுவாமியின் பதில்

by Bella Dalima 11-05-2018 | 8:11 PM
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கி உள்வாங்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பதிலளித்தார். சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகளில் சிறந்த ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்பதிலும் சிறந்த வழிகாட்டலுடன் சரியான பாதையில் அதனை வழிநடத்த வேண்டும் என்பதிலும் அதை எவ்வாறு யார் வழிநடத்துவது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒழுங்குமுறைகளை சிறப்புற உருவாக்குவதில் மத்திய வங்கியால் சிறந்த வகிபாகத்தை வகிக்க முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வௌியிட்டார்.