உயர்தர  மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகின

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன

by Bella Dalima 11-05-2018 | 7:13 PM
Colombo (News 1st)  2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.doenets.lk) மாணவர்கள் பார்வையிட முடியும். 60,332 பேர் இம்முறை பரீட்சை மீளாய்விற்கு விண்ணப்பித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.