by Bella Dalima 11-05-2018 | 5:09 PM
கென்யாவில் தொடர் மழை காரணமாக அணை உடைந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் நகுகு நகரத்திற்கு அருகே சோலை என்ற இடத்தில் படேல் எனும் தனியார் அணை உள்ளது.
நீர்பாசனத்திற்காகவும் மீன் வளர்ப்பிற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் பெய்த தொடர் கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை எதிர்பாராத விதமாக அந்த அணை உடைந்துள்ளது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை.
பொதுமக்கள் பலர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், என்ன நடந்தது என்று அறிந்துகொள்ளும் முன்னரே தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகியுள்ளனர்.
கென்யாவில் கடும் வறட்சிக்குப் பிறகு, தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.