இளஞ்செழியன் உள்ளிட்ட நீதிபதிகள் சிலருக்கு இடமாற்றம்
by Bella Dalima 11-05-2018 | 7:53 PM
Colombo (News 1st)
வித்தியா கொலை வழக்கினை விசாரித்த நீதிபதிகள் குழாமின் மூன்று நீதிபதிகள் உள்ளடங்கலான மேலும் சில நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், இதுவரை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட அண்ணலிங்கம் பிரேம்சங்கர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய பாலேந்திரன் சசிமகேந்திரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்றாம் இலக்க நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் கல்முனை மேல் நீதிமன்றத்தின் குடியியல் நியாயாதிக்க மற்றும் குற்றவியல் நியாயாதிக்க பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த மாரசிங்க இரத்தினபுரி மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்களுக்கமைய, நீதிபதி மொஹமட் அப்துல்லாஹ் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் நியாயாதிக்க நீதிபதியாகவும் கடமையாற்றுவார்.
சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஷ்ட சட்டத்தரணி சா.சூசைதாஸன் மட்டக்களப்பு மற்றும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் .
இதனைத் தவிர, கம்பஹா மாவட்ட நீதிபதி R.S.S.சபுவித கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிஸ்சங்க, கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார மற்றும் அத்தனகல மாவட்ட நீதிபதி S.I.S. சுரவீர ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி M.B.M. அபேரத்ன, M.M.S.வைமாபா பண்டார, வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.நந்தசேகரன் ஆகியோரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
ஹோமாகம மாவட்ட நீதிபதி கிருஷாந்தி அமரதுங்க , மொரட்டுவ மாட்ட நீதிபதி W.Y.S.பெர்னாண்டோ, அவிசாவளை மாவட்ட நீதிபதி M.G.G. சிறிபால, ஹொரன மாவட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய ஆகியோரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.