by Bella Dalima 10-05-2018 | 8:36 PM
Colombo (News 1st)
ஹப்புத்தளை - கல்கந்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
ஹப்புத்தளை - கல்கந்த தோட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கடந்த 6 ஆம் திகதி மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் E.L.M.உதயகுமார தெரிவித்தார்.
கல்கந்த தோட்டத்தில் வசித்து வந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் இடம்பெயர்ந்து கல்கந்த, இலக்கம் 2 வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் E.L.M. உதயகுமார குறிப்பிட்டார்.